Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், வீரஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஐப்பசி முதல் ஞாயிறு சிறப்புபூஜை நடந்தது.
மல்லசமுத்திரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகசவுந்தரராஜபெருமாள் சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, வீரஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் ஐப்பசிமாத முதல் ஞாயிறு தினத்தை முன்னிட்டு, சுவாமிக்கு 54 வடைமாலை சாத்தப்பட்டது.
மேலும் மாலை 6 முதல் 7 மணிவரையில் சுவாமிக்கு பல்வேறு மூலிகை திரவியங்கள் மற்றும் வாசனை திரவியங்களைகொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பெண்கள் தீபமிட்டு வழிபட்டனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மல்லசமுத்திரம் வீரஆஞ்சநேயர் சுவாமி ஐப்பசி முதல் ஞாயிறு பூஜையில் சிறப்பு தோற்றத்தில் காட்சியளித்தார்.